ஏன் செங்கடலை கடக்க வேணும்? Why should we cross the Red Sea?

Why Should We Cross the Red Sea?
ஏன் செங்கடலை கடக்க வேணும்?
Why should we cross the Red Sea?
क्यों हमें लाल समुद्र को पार करना चाहिए?

Key Verse: யாத்திராகமம் 13:17-18

பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,

சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.

1

விடுதலை அடைய To receive deliverance उद्धार पाने के लिए

முழுமையான விடுதலை, செங்கடலை தாண்டினால் மட்டுமே உண்டாகும்

எகிப்தின் விடுதலை பூரணமானதல்ல

Exo 6:7-உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

2

புதிய வாழ்க்கை பெற To enter into a new life नई जीवन में प्रवेश करने के लिए

பழைய அடிமைத்தனமான எகிப்திய வாழ்க்கையிலிருந்து, தேவனைப் பின்பற்றும் ஒரு புதிய, சுதந்திரமான வாழ்க்கைக்குள் நுழைவதைக் குறிக்கிறது.

1 கொரிந்தியர் 10:1. இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

2. எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

ஞானஸ்நானம் எதை குறிக்கிறது?

Rom 6:4-மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

3

பாவத்திலிருந்து விடுதலை பெற To be set free from sin पापों से मुक्ति पाने के लिए

அடிமைத்தனமும், பழைய வாழ்க்கையும் செங்கடல் வரை உள்ளது
செங்கடலைக் கடப்பது, பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, தேவனுடைய வழியில் (கிருபை) நடப்பதாகும்.

Ps 33:18-தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

4

தேவனுடைய வல்லமையை காண To witness the power of God परमेश्वर की सामर्थ्य को देखने के लिए

Exo 14:31. கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

Ps 106:9. அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

Ps 136:13-சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

14. அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

15. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

5

விசுவாசத்தை பெறுக செய்ய To receive and grow in faith विश्वास पाने और बढ़ाने के लिए

விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

Heb 11:29-விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.

Preached on 19/10/25 by Rev.Israel

Comments

Popular posts from this blog

🎵 நன்றி நன்றி நன்றி 🎵 Nandri nandri nandri 🎵

🎵 ஒரு குறைவில்லாமல் காத்து 🎵 Oru kurai villamal kaatthu 🎵

🎵எண்ணிமுடியாத அதிசயங்கள் 🎵Ennimudiyadha adhisayangal 🎵